புலமைப்பரிசில் திட்டம்

கல்விக்கான பொருளாதார வசதியின்றி கல்வியைத் தொடரமுடியாது தவிக்கும் சிவதொண்டர் அணிகளிலிணைந்துள்ள மாணவர்களின் கல்வி நிலையினை மேம்படுத்தும் முகமாக பாடசாலைகளிலும் அறநெறிப் பாடசாலைகளிலும் அமைந்துள்ள சிவதொண்டர் அணியிலுள்ள மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒவ்வொரு அணியிலும் 10 மாணவர்களுக்கு புலமைப்பரிசிலாக ஒரு தவணைக்கு 3000 ரூபா வீதம் வழங்க நடவடிக்கை எடுத்து எடுத்து செயற்படுத்தி வருகின்றோம். இப் புலமைப்பரிசிலானது மாமன்றத்தை வழிநடாத்தி அமரர்களாகிவிட்ட செம்மல்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகிறது.