ஆன்மீகப்பணிகள்

எமது மக்களிடையே ஆன்மீக உணர்வையும் இறைபக்தியையும் வளர்த்து அவர்களை எமது சமய வழியில் வாழ வழிவகுக்கும் பல பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறோம், என்ற திருப்தியுடன் கூற எங்களுக்கு இறையருள் கிடைத்திருக்கின்றது.

ஆலய வழிபாட்டை மையமாகக் கொண்ட எமது சமயத்தில் மக்களை ஆன்மீக வழிபாட்டில் இட்டுச் செல்வதில் தொடர்ந்தும் ஆலயங்கள் வகிக்கும் முக்கிய பங்கை எவரும் மறுக்கமுடியாது. ஆலயங்களைப் பேணி ஆலயவழிபாடுகளை முறையாக நடத்துவதில் பெரும்பாலான ஆலய நிர்வாகங்கள் தங்கள் பொறுப்பைச் செவ்வனேயாற்றி வருகின்றன. எனவே பின் தங்கிய இடங்களிலும் குறிப்பாக எமது இந்து மக்களுக்கு சவாலாக இருக்கும் சூழலில் உள்ள ஆலயங்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்வதை மாமன்றத்தின் கடமை என்பதையும் மறவாது செயற்பட்டு வந்திரக்கிறோம்.

மேலும் ஆன்மீகக் கருத்தரங்குகள் மூலமும், “இந்து ஒளி” போன்ற எமது வெளியீடுகள் மூலமும் மக்களிடையே ஆன்மீக ஞான ஒளியைப் பரப்பி வருகிறோம்.